சோழர்களின் புலி சின்னம்
வாணகோ அரையரின் மகளும்
மூன்றாம் இராசராச சோழனுடைய (1216-1256)
பட்டத்தரசியும்மான சோழனை முழுதுடையாள்
கூத்தாடும் தேவர் நாச்சியார் என்பவரின் பெயருக்கு முன்னால் இந்த புலி சின்னம் கோட்டோவியமாக செதுக்கப்பட்டுள்ளது.
ஈஸ்வரன் கோயிலின் கருவறையின் வடக்கு புறம் நான்முகனின் கீழ் குமுதப்பட்டையில் உள்ளது.
தமிழ் நாட்டில் வேறு எங்கேனும் சோழர்களின் புலி இலாஞ்சனை
கண்டுபிடிக்கப்பட்டுள்ளனவா?
கல்வெட்டு செய்தி
"..ஸ்ரீ வாணகோவரையர் மகளார் கூத்தாடுந்தேவர் னாச்சியார்
சோழனை முழுதுமுடை
யார் பெண்னை நாயனாற்கு திரிநுந்தா விளக்குக்கு குடுத்த
பசு பத்து ரிஷப க..."
கல்வெட்டு விளக்கம்
கல்வெட்டின் துவக்கத்தில் சோழர்களின் புலி சின்னம்
பொறிக்கப்பட்டுள்ளன .வாணகோவரையரின் மகளும்
சோழனை முழுதும் உடையவருமான கூத்தாடுந் தேவர் நாச்சியார் பெண்னை நாயனாற்கு ஓரு நுந்தா விளக்குக்கு
எரிக்க பத்து பசுவும், ஓரு எருதும் தானமாக கொடுத்துள்ளார்.
இக்கோயிலில் மூன்றாம் இராசராச சோழனுடைய(1216-1256)
கல்வெட்டுகளும்
மூன்றாம் குலோத்துங்க சோழனுடைய (1178-1218) கல்வெட்டுகளும் நிறைய காணப்படுகின்றன.
ஆதலால் இது மூன்றாம் இராசராசனின் பட்டத்தரசியாகதான் இருக்க முடியும். அதுவும் சோழனை முழுதுடையாள் என்ற வாசகம் வருவதால் கண்டிப்பாக இராசராசனின் பட்டத்தரசிதான்.
புலிக்கொடி யேற்றம்
பழங்காலச் சோழர் குலப் பெருமையெல்லாம் தன் பெருமையாக்கிக் கொண்டவன் கரிகால் சோழன் என்னும் திருமாவளவன். அடலேறு போன்ற அவ்வீரன் வடநாட்டின்மேற் படையெடுத்தான்; தடுப்பார் எவருமின்றி, இமையமலையை அடுத்தான்; விண்ணளாவிய அம் மலையை அண்ணாந்து நோக்கினான்; தன் வேகம் தடுத்தாண்ட அவ் விலங்கலின்மீது சோழ நாட்டு வேங்கைக் கொடியை ஏற்றினான். அவன் பெருமையைச் சிலப்பதிகாரம் பாடிற்று. [2]
வெற்றி வீரனாகத் தமிழ் நாட்டை நோக்கித் திரும்பி வரும் பொழுது திருமாவளவனை வச்சிர நாட்டு மன்ன்ன் வரவேற்று முத்துப் பந்தலைத் திறையாக அளித்தான். மகத நாட்டரசன் தடுத்துப் போர் புரிந்து தோற்றான்; எட்டுத் திசையும் புகழ் பெற்ற வளவனுக்குப் பட்டிமண்டபத்தைத் திறையாக இட்டு வசங்கினான். அவந்தி நாட்டு அரசன் முன்னமே நண்பனாதலின், மனம் உவந்து தமிழ் மன்னனை வரவேற்றுத் தோரணவாயில் ஒன்று பரிசாகத் தந்தான். பொன்னாலும் மணியாலும் ஆன்னார் மூவரும் புனைந்து அளித்த அரும் பரிசுகள் [3] பூம்புகார் நகரின் சித்திர மாளிகையில் சிறந்த காட்சிப் பொருள்களாக அமைந்தன. அவற்றைக் கண்டு விம்மிதம் உற்றனர் வீரர் எல்லாம்.
இமயத்தின் உச்சியில் சோழனின் புலி சின்னம்
கரிகாற் பெருவளத்தானின் காலம் கி.மு.இரண்டு அல்லது முதலாம் நூற்றாண்டாக இருக்கவேண்டும்.
கரிகாலசோழனின் இமய படை எடுப்பை பற்றி சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோ அடிகளும், பெரிய புராணம் இயற்றிய சேக்கிழாரும் பதிவு செய்துள்ளார்கள்.
இமயத்தில் புலி சின்னம் பதித்தை குறிப்பிடும் சேக்கிழார்
"இலங்கு வேற் கரிகாற் பெருவளத்தோன் வண்திறல் புலி இமயால் வரை மேல் வைக்க வெகுவோன்" என்று புலி சின்னம் பொறிக்கப்பெற்றதைக் குறிப்பிடுகிறார்.
சோழர் கணவாய்
சீனர்கள் இமயமலையை திபேத் பகுதியிலிருந்து கடப்பதற்காக பயண்படுத்திய கணவாய்களுள் ஒன்றுதான்
சோழர் கணவாயாகும்.
பூம்புகாரிலிருந்து வடபுலம் நோக்கி சென்ற கரிகாலனது பெரும்படை கிழக்கு கடற்கரையை ஒட்டியே சென்று கலிங்கம்(ஒரிசா) வங்கம் போன்ற நாடுகளை கடந்து இமயத்தின் உச்சியில் சோழனின் புலி சின்னத்தை பொறிக்கப்பட்டிருக்க வேண்டும்.
புலி முத்திரை
புகார் நகரின் துறைமுகத்தில் சங்ககாலத்தில் பொருள்களுக்குப் புலி முத்திரை பொறிக்கப்பட்டதாகப் பட்டினப்பாலை கூறிகிறது.
'அளந்து அறியாப் பலபண்டம்
வரம்பு அறியாமை வந்து ஈண்டி
அருங்கடிப் பெரும் காப்பின்
வலியுடைவல் அணங்கின் நோன்
புலி பொறித்துப் புறம் போக்கி'
வாணகோ அரையரின் மகளும்
மூன்றாம் இராசராச சோழனுடைய (1216-1256)
பட்டத்தரசியும்மான சோழனை முழுதுடையாள்
கூத்தாடும் தேவர் நாச்சியார் என்பவரின் பெயருக்கு முன்னால் இந்த புலி சின்னம் கோட்டோவியமாக செதுக்கப்பட்டுள்ளது.
ஈஸ்வரன் கோயிலின் கருவறையின் வடக்கு புறம் நான்முகனின் கீழ் குமுதப்பட்டையில் உள்ளது.
தமிழ் நாட்டில் வேறு எங்கேனும் சோழர்களின் புலி இலாஞ்சனை
கண்டுபிடிக்கப்பட்டுள்ளனவா?
கல்வெட்டு செய்தி
"..ஸ்ரீ வாணகோவரையர் மகளார் கூத்தாடுந்தேவர் னாச்சியார்
சோழனை முழுதுமுடை
யார் பெண்னை நாயனாற்கு திரிநுந்தா விளக்குக்கு குடுத்த
பசு பத்து ரிஷப க..."
கல்வெட்டு விளக்கம்
கல்வெட்டின் துவக்கத்தில் சோழர்களின் புலி சின்னம்
பொறிக்கப்பட்டுள்ளன .வாணகோவரையரின் மகளும்
சோழனை முழுதும் உடையவருமான கூத்தாடுந் தேவர் நாச்சியார் பெண்னை நாயனாற்கு ஓரு நுந்தா விளக்குக்கு
எரிக்க பத்து பசுவும், ஓரு எருதும் தானமாக கொடுத்துள்ளார்.
இக்கோயிலில் மூன்றாம் இராசராச சோழனுடைய(1216-1256)
கல்வெட்டுகளும்
மூன்றாம் குலோத்துங்க சோழனுடைய (1178-1218) கல்வெட்டுகளும் நிறைய காணப்படுகின்றன.
ஆதலால் இது மூன்றாம் இராசராசனின் பட்டத்தரசியாகதான் இருக்க முடியும். அதுவும் சோழனை முழுதுடையாள் என்ற வாசகம் வருவதால் கண்டிப்பாக இராசராசனின் பட்டத்தரசிதான்.
புலிக்கொடி யேற்றம்
பழங்காலச் சோழர் குலப் பெருமையெல்லாம் தன் பெருமையாக்கிக் கொண்டவன் கரிகால் சோழன் என்னும் திருமாவளவன். அடலேறு போன்ற அவ்வீரன் வடநாட்டின்மேற் படையெடுத்தான்; தடுப்பார் எவருமின்றி, இமையமலையை அடுத்தான்; விண்ணளாவிய அம் மலையை அண்ணாந்து நோக்கினான்; தன் வேகம் தடுத்தாண்ட அவ் விலங்கலின்மீது சோழ நாட்டு வேங்கைக் கொடியை ஏற்றினான். அவன் பெருமையைச் சிலப்பதிகாரம் பாடிற்று. [2]
வெற்றி வீரனாகத் தமிழ் நாட்டை நோக்கித் திரும்பி வரும் பொழுது திருமாவளவனை வச்சிர நாட்டு மன்ன்ன் வரவேற்று முத்துப் பந்தலைத் திறையாக அளித்தான். மகத நாட்டரசன் தடுத்துப் போர் புரிந்து தோற்றான்; எட்டுத் திசையும் புகழ் பெற்ற வளவனுக்குப் பட்டிமண்டபத்தைத் திறையாக இட்டு வசங்கினான். அவந்தி நாட்டு அரசன் முன்னமே நண்பனாதலின், மனம் உவந்து தமிழ் மன்னனை வரவேற்றுத் தோரணவாயில் ஒன்று பரிசாகத் தந்தான். பொன்னாலும் மணியாலும் ஆன்னார் மூவரும் புனைந்து அளித்த அரும் பரிசுகள் [3] பூம்புகார் நகரின் சித்திர மாளிகையில் சிறந்த காட்சிப் பொருள்களாக அமைந்தன. அவற்றைக் கண்டு விம்மிதம் உற்றனர் வீரர் எல்லாம்.
இமயத்தின் உச்சியில் சோழனின் புலி சின்னம்
கரிகாற் பெருவளத்தானின் காலம் கி.மு.இரண்டு அல்லது முதலாம் நூற்றாண்டாக இருக்கவேண்டும்.
கரிகாலசோழனின் இமய படை எடுப்பை பற்றி சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோ அடிகளும், பெரிய புராணம் இயற்றிய சேக்கிழாரும் பதிவு செய்துள்ளார்கள்.
இமயத்தில் புலி சின்னம் பதித்தை குறிப்பிடும் சேக்கிழார்
"இலங்கு வேற் கரிகாற் பெருவளத்தோன் வண்திறல் புலி இமயால் வரை மேல் வைக்க வெகுவோன்" என்று புலி சின்னம் பொறிக்கப்பெற்றதைக் குறிப்பிடுகிறார்.
சோழர் கணவாய்
சீனர்கள் இமயமலையை திபேத் பகுதியிலிருந்து கடப்பதற்காக பயண்படுத்திய கணவாய்களுள் ஒன்றுதான்
சோழர் கணவாயாகும்.
பூம்புகாரிலிருந்து வடபுலம் நோக்கி சென்ற கரிகாலனது பெரும்படை கிழக்கு கடற்கரையை ஒட்டியே சென்று கலிங்கம்(ஒரிசா) வங்கம் போன்ற நாடுகளை கடந்து இமயத்தின் உச்சியில் சோழனின் புலி சின்னத்தை பொறிக்கப்பட்டிருக்க வேண்டும்.
புலி முத்திரை
புகார் நகரின் துறைமுகத்தில் சங்ககாலத்தில் பொருள்களுக்குப் புலி முத்திரை பொறிக்கப்பட்டதாகப் பட்டினப்பாலை கூறிகிறது.
'அளந்து அறியாப் பலபண்டம்
வரம்பு அறியாமை வந்து ஈண்டி
அருங்கடிப் பெரும் காப்பின்
வலியுடைவல் அணங்கின் நோன்
புலி பொறித்துப் புறம் போக்கி'
No comments:
Post a Comment