கல்வெட்டின் அமைப்புஇந்தக் கல்வெட்டுகள் உரைநடை வடிவிலும், பாடல் வடிவிலும் எழுதப் பெற்றிருக்கும். சில இடங்களில் உரைநடை - பாடல் இரண்டு வடிவங்களிலும் எழுதப் பெற்றிருக்கும். பாடல் கல்வெட்டுகள்கூட யாப்பு இலக்கண முறையில் பாடல் வடிவில் இல்லாமல், உரைநடை போல் தொடர்ந்து எழுதப்பட்டிருக்கும்.
• உரைநடைகி.பி. 926ஆம் ஆண்டு, முதல் பராந்தக சோழனின் இருபத்திரண்டாம் ஆட்சியாண்டில் திருவிசலூர்ச் சிவபெருமானுக்கு, கிளிநல்லூர் உடையான் பாகன் சர்வதேவன் என்பவன் 96 ஆடுகள் கொடுத்து ஒரு நந்தா விளக்கு வைத்தான். இதை அக்கோயிலில் உள்ள கல்வெட்டு, பின்வருமாறு உரைநடையில் கூறுகிறது :
ஸ்வஸ்திஸ்ரீ மதிரை கொண்ட
கோப்பரகேசரி வன்மர்க்கு
யாண்டு 22 ஆவது வட
கரைத் தேவதான பிரமதேய
ம் அவநிநாராயணச்ச
துர்வேதிமங்கலத்துத் தி
ருவிசலூ ர்ப் பெருமானடி
களுக்குக் கிழார்க் கூற்றத்துக் கிளிநல்
லூ ர்க் கிளிநல்லூர்க் கிழவன் பாக
ன் சர்வதேவன் தொண்ணூற்றா றாட்டா
ல் வந்த நெய்கொண்டு சந்திராதித்த
வல் எரிவதற்கு வைத்த நொந்தா விளக்கு
ஒன்று இது ஊர்ப் பெருங்குறி
பெருமக்கள் ரக்ஷை உ
(யாண்டு 22 ஆவது - பராந்தக சோழனின் இருபத்திரண்டாம் ஆட்சி ஆண்டு ; தேவதானம் - கோயில் கொடை ஊர்; பிரமதேயம் - பிராமணர்கட்குக் கொடையாக அளிக்கப்பட்ட ஊர்; சதுர்வேதம் - நான்கு வேதம்;பெருமானடிகள் - சிவபெருமான்; கூற்றம் - நாட்டின் உள்பிரிவு; கிழவன் - உரியவன்; சந்திராதித்தவல் - சந்திர சூரியர் உள்ளவரை; பெருங்குறி - ஊர் ஆளும் சபை; நொந்தா விளக்கு - எப்பொழுதும் எரியும் நந்தாவிளக்கு)
• உரைநடைகி.பி. 926ஆம் ஆண்டு, முதல் பராந்தக சோழனின் இருபத்திரண்டாம் ஆட்சியாண்டில் திருவிசலூர்ச் சிவபெருமானுக்கு, கிளிநல்லூர் உடையான் பாகன் சர்வதேவன் என்பவன் 96 ஆடுகள் கொடுத்து ஒரு நந்தா விளக்கு வைத்தான். இதை அக்கோயிலில் உள்ள கல்வெட்டு, பின்வருமாறு உரைநடையில் கூறுகிறது :
ஸ்வஸ்திஸ்ரீ மதிரை கொண்ட
கோப்பரகேசரி வன்மர்க்கு
யாண்டு 22 ஆவது வட
கரைத் தேவதான பிரமதேய
ம் அவநிநாராயணச்ச
துர்வேதிமங்கலத்துத் தி
ருவிசலூ ர்ப் பெருமானடி
களுக்குக் கிழார்க் கூற்றத்துக் கிளிநல்
லூ ர்க் கிளிநல்லூர்க் கிழவன் பாக
ன் சர்வதேவன் தொண்ணூற்றா றாட்டா
ல் வந்த நெய்கொண்டு சந்திராதித்த
வல் எரிவதற்கு வைத்த நொந்தா விளக்கு
ஒன்று இது ஊர்ப் பெருங்குறி
பெருமக்கள் ரக்ஷை உ
(யாண்டு 22 ஆவது - பராந்தக சோழனின் இருபத்திரண்டாம் ஆட்சி ஆண்டு ; தேவதானம் - கோயில் கொடை ஊர்; பிரமதேயம் - பிராமணர்கட்குக் கொடையாக அளிக்கப்பட்ட ஊர்; சதுர்வேதம் - நான்கு வேதம்;பெருமானடிகள் - சிவபெருமான்; கூற்றம் - நாட்டின் உள்பிரிவு; கிழவன் - உரியவன்; சந்திராதித்தவல் - சந்திர சூரியர் உள்ளவரை; பெருங்குறி - ஊர் ஆளும் சபை; நொந்தா விளக்கு - எப்பொழுதும் எரியும் நந்தாவிளக்கு)
No comments:
Post a Comment