வாலிகண்டபுரம் கல்வெட்டு (கி.பி.1227) நத்தமான்களை "98 இடங்கை பிரிவினரில் ஒருவர் என்றும் சித்திரமேழி பெரிய நாடான யாதவ குல தலைவர்கள் என்றும் குறிப்பிடுகிறது. சித்திரமேழி நாடு என்பது வளம்பொருந்திய நாடாகும். அத்தகைய வளம்பொருந்திய நாட்டிற்கு தலைவர்கள் என்றும் "யாதவ குல தலைவர்கள்" என்றும் கல்வெட்டு குறிப்பிடுகிறது. "சித்திரமேழி நாடு" என்ற சொல்லை வைத்து சிலர், அச் சொல் வேளாளர்களுடையது என்று சிறிதும் சான்று இல்லாமல் சித்தரிக்கிறார்கள். பிராமணகளுக்கும் அச் சொல்லாடல் வழக்கத்தில் இருந்துள்ளது. அச் சொல் "வளம்பொருந்திய நாட்டை உடையவர்கள்" என்பதாகும். குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டம் தாமரைப்பாக்கம் கல்வெட்டில் "பல மண்டலத்து நாடு செய்வான் சித்திரமேழினாடு உடையானேன்". அதாவது "பல மண்டலத்தை ஆட்சி செய்யும் வலம்பொருந்திய நாட்டை உடையவர்கள் என்பதாகும் இதன் பொருள்.
பிற்காலச் சோழர் காலத்தில் வன்னாடுடையார்கள் என்ற பெயரில் "நத்தமான்கள்" குறுநில மன்னர்களாக இருந்திருக்கிறார்கள். கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் வன்னாடு (வந்நாடு) என்பது இன்றைய அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக விளங்கியிருக்கிறது. வாலிகண்டபுரம் வாலிஸ்வரர் கோயிலில் வன்னாடுடையார்களைப் பற்றிய பல கல்வெட்டுகள் காணக்கிடைக்கின்றனர். வன்னாடுடையார்கள் சோழர்களுக்கு உறவினர்களாக விளங்கியுள்ளார்கள். கி.பி. 947 ஆம் ஆண்டைச் சார்ந்த திருவையாறு கல்வெட்டு ஒன்று முதலாம் பராந்தக சோழனின் பட்டத்தரசியாக அரிஞ்சிகை என்பவளை பற்றி குறிப்பிடுகிறது. இவ்வரசி "வன்னாடுடையான் இலாடராயன்" என்பவரது மகளாவர். வன்னாடுடையார்கள் மிலாட்டுடையார்களுடனும் திருமண உறவை கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment