சங்க இலக்கியம்;
#மலையமான்
#வேள்பாரி
#இருங்கோவேள்
விரைந்து வந்து போரைத் தடுக்க வலிய வேலினை உடைய மலையன் அல்லனாயின் போரை வெல்லுதல் நமக்கு எளிதெனத் தோற்றவனும், நம்மைத் தொலைவித்தோன் இவ னென நின்னைப் புகழ்வான்; வென்றவனும், நம்மை வெல்வித்தோன் இவனென நின்னைப் புகழ்வான்", என்று சோழனுக்குத் துப்பாகிய தேர்வண்மலையனை வடமவண்ணக்கன் பெருஞ்சாத்தனார் சிறப்பித்தார் (புற, 125:14)
குன்றத்து அன்ன களிறு பெயரக்
கடந்துஅட்டு வென்றோனும் நிற்கூ றும்மே
வெலீஇயோன் இவன் எனக்
கழல்அணிப் பொலிந்த சேவடி நிலம்கவர்பு
விரைந்துவந்து சமம் தாங்கிய
வல்வேல் மலையன் அல்லன் ஆயின்
நல்அமர் கடத்தல் எளிதுமன் நமக்குஎனத்
தோற்றோன் தானும் நிற்கூ றும்மே
(புறநானூறு 125)
முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி
செல்லா நல்இசை நிறுத்த வல்வில்
ஓரிக் கொன்று சேரலர்க்கு ஈந்த
ஓரிக்கொன்றவொருபெருந் திருவிற், காரி புக்க நேரார் புலம்போற், கல்லென் றன்றாலூரே"
தொலையா நல்லிசை விளங்கு மலயன்
மகிழாது ஈத்த இழையணி நெடுந்தேர்
பயங் கெழு முள்ளூர் மீமிசைப்
பட்ட மாரி உறையினும் பலவே.
: துயில் மடிந்தன்ன தூங்கிருள் இறும்பின்
பறை இசை அருவி முள்ளூர்ப் பொருநர்
தெறல் அரும் மரபின் நின் கிளையொடும் பொலிய
மாயிரு முள்ளூர் மன்னன் மாவூர்ந்தெல்லித் தரீஇய வினநிரைப், பல்லான் கிழவரின்" -
ஆரியர் துவன்றிய பேர் இசை முள்ளூர்
பலர் உடன் கழித்த ஒள் வாள் மலையன, தொருவேற் கோடி யாங்கு
ஊராது ஏந்திய குதிரைக் கூர் வேல்
கூவிளங் கண்ணிக் கொடும் பூண் எழினி
எள் அறு சிறப்பின் முள்ளூர் மீமிசை
அரு வழி இருந்த பெரு விறல் வளவன்
மதி மருள் வெண் குடை காட்டி அக்குடை
புதுமையின் நிறுத்த புகழ் மேம்படுந
விடர்ப்புலி பொறித்த கோட்டைச் சுடர்ப் பூண்
சுரும்பு ஆர் கண்ணிப் பெரும் பெயர் நும் முன்
ஈண்டுச் செய் நல்வினை யாண்டுச் சென்று உணீஇயர்
உயர்ந்தோர் உலகத்துப் பெயர்ந்தனன் ஆகலின்
துஞ்சா முழவின் கோவல் கோமான்
நெடுந்தேர்க் காரி கொடுங்கால் முன் துறை
பெண்ணையம் பேரியாற்று நுண் அறல் கடுக்கும்
நெறி இருங்கதுப்பின் என் பேதைக்கு
அறியாத் தேஎத்து ஆற்றிய துணையே.
பாரியது பறம்பு வேலால் வெல்லும் வேந்தர்க்கு அரிது; பாடினளாய் வரும் கிணையையுடைய விறலிக்கு எளிது’ என்று கபிலர் கூறினார் (புற. 111:2).
'பல வேற்படையுடன் தலைமை பொருந்திய யானையையுமுடைய வேந் தர்க்கு இன்னாதவனாகவும் எமக்கு இனியோனாகவும் உள்ளவன் பாரி", என்று அவன் சிறப்பினைக் கபிலர் கூறினார் (புற. 115:4).
கூரிய வேலினையுடைய பாரியது பெறுதற்கருமையை அறியாராய்ப் போரேற்று வந்த வென்றிப்பட்ட தானையுடைய வேந்தரது கலிமாவை முன்பு வரையின்கண் ஏறி எண்ணும் பாரிமகளிர், இப்பொழுது ஈத்திலைக் குப்பையேறி உமணர் உப்பு வண்டியை எண்ணுவர் (புற. 116:16).
கூரிய வேலை ஏந்திய திரண்ட தோளையும், தேர் வண்மையையும் உடையவன் பாரி (புற. 118:4). '
வென்றி வேலையுடைய, பகைவர் அஞ்சும் தானையையுடைய, கேடில்லாத நாட்டுக்குரியோன் இருங்கோவேள்
பெரும, இவர் கைவண்மையுடைய பாரமகளிரென்று சொல்லிய எனது தெளியாத புன்சொல்லைப் பொறுப் பாயாக; யான் சென்று வருகின்றேன்; நின் வேல் வெல்வதாக" என்று பாரிமகளிரைக் கொள்ளாத இருங் கோவேனிடம் கபிலர் கூறினார்
#மலையமான்
#வேள்பாரி
#இருங்கோவேள்
விரைந்து வந்து போரைத் தடுக்க வலிய வேலினை உடைய மலையன் அல்லனாயின் போரை வெல்லுதல் நமக்கு எளிதெனத் தோற்றவனும், நம்மைத் தொலைவித்தோன் இவ னென நின்னைப் புகழ்வான்; வென்றவனும், நம்மை வெல்வித்தோன் இவனென நின்னைப் புகழ்வான்", என்று சோழனுக்குத் துப்பாகிய தேர்வண்மலையனை வடமவண்ணக்கன் பெருஞ்சாத்தனார் சிறப்பித்தார் (புற, 125:14)
குன்றத்து அன்ன களிறு பெயரக்
கடந்துஅட்டு வென்றோனும் நிற்கூ றும்மே
வெலீஇயோன் இவன் எனக்
கழல்அணிப் பொலிந்த சேவடி நிலம்கவர்பு
விரைந்துவந்து சமம் தாங்கிய
வல்வேல் மலையன் அல்லன் ஆயின்
நல்அமர் கடத்தல் எளிதுமன் நமக்குஎனத்
தோற்றோன் தானும் நிற்கூ றும்மே
(புறநானூறு 125)
முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி
செல்லா நல்இசை நிறுத்த வல்வில்
ஓரிக் கொன்று சேரலர்க்கு ஈந்த
ஓரிக்கொன்றவொருபெருந் திருவிற், காரி புக்க நேரார் புலம்போற், கல்லென் றன்றாலூரே"
தொலையா நல்லிசை விளங்கு மலயன்
மகிழாது ஈத்த இழையணி நெடுந்தேர்
பயங் கெழு முள்ளூர் மீமிசைப்
பட்ட மாரி உறையினும் பலவே.
: துயில் மடிந்தன்ன தூங்கிருள் இறும்பின்
பறை இசை அருவி முள்ளூர்ப் பொருநர்
தெறல் அரும் மரபின் நின் கிளையொடும் பொலிய
மாயிரு முள்ளூர் மன்னன் மாவூர்ந்தெல்லித் தரீஇய வினநிரைப், பல்லான் கிழவரின்" -
ஆரியர் துவன்றிய பேர் இசை முள்ளூர்
பலர் உடன் கழித்த ஒள் வாள் மலையன, தொருவேற் கோடி யாங்கு
ஊராது ஏந்திய குதிரைக் கூர் வேல்
கூவிளங் கண்ணிக் கொடும் பூண் எழினி
எள் அறு சிறப்பின் முள்ளூர் மீமிசை
அரு வழி இருந்த பெரு விறல் வளவன்
மதி மருள் வெண் குடை காட்டி அக்குடை
புதுமையின் நிறுத்த புகழ் மேம்படுந
விடர்ப்புலி பொறித்த கோட்டைச் சுடர்ப் பூண்
சுரும்பு ஆர் கண்ணிப் பெரும் பெயர் நும் முன்
ஈண்டுச் செய் நல்வினை யாண்டுச் சென்று உணீஇயர்
உயர்ந்தோர் உலகத்துப் பெயர்ந்தனன் ஆகலின்
துஞ்சா முழவின் கோவல் கோமான்
நெடுந்தேர்க் காரி கொடுங்கால் முன் துறை
பெண்ணையம் பேரியாற்று நுண் அறல் கடுக்கும்
நெறி இருங்கதுப்பின் என் பேதைக்கு
அறியாத் தேஎத்து ஆற்றிய துணையே.
பாரியது பறம்பு வேலால் வெல்லும் வேந்தர்க்கு அரிது; பாடினளாய் வரும் கிணையையுடைய விறலிக்கு எளிது’ என்று கபிலர் கூறினார் (புற. 111:2).
'பல வேற்படையுடன் தலைமை பொருந்திய யானையையுமுடைய வேந் தர்க்கு இன்னாதவனாகவும் எமக்கு இனியோனாகவும் உள்ளவன் பாரி", என்று அவன் சிறப்பினைக் கபிலர் கூறினார் (புற. 115:4).
கூரிய வேலினையுடைய பாரியது பெறுதற்கருமையை அறியாராய்ப் போரேற்று வந்த வென்றிப்பட்ட தானையுடைய வேந்தரது கலிமாவை முன்பு வரையின்கண் ஏறி எண்ணும் பாரிமகளிர், இப்பொழுது ஈத்திலைக் குப்பையேறி உமணர் உப்பு வண்டியை எண்ணுவர் (புற. 116:16).
கூரிய வேலை ஏந்திய திரண்ட தோளையும், தேர் வண்மையையும் உடையவன் பாரி (புற. 118:4). '
வென்றி வேலையுடைய, பகைவர் அஞ்சும் தானையையுடைய, கேடில்லாத நாட்டுக்குரியோன் இருங்கோவேள்
பெரும, இவர் கைவண்மையுடைய பாரமகளிரென்று சொல்லிய எனது தெளியாத புன்சொல்லைப் பொறுப் பாயாக; யான் சென்று வருகின்றேன்; நின் வேல் வெல்வதாக" என்று பாரிமகளிரைக் கொள்ளாத இருங் கோவேனிடம் கபிலர் கூறினார்
No comments:
Post a Comment