நடுநாடு - பெயர்க் காரணம்
'தொண்டை நாடு சான்றோர் உடைத்து'; 'சோழ நாடு சோறுடைத்து'
என்பன முதுமொழிகள்; இவ்விரு நாடுகட்கும் நடுவில் இருத்தலாலும், இவ்விரு நாடுகளின் தனிச் சிறப்பான சான்றோரையும் சோற்று வளத்தையும் தான் ஒருசேரப் பெற்றிருத்தலாலும் இப் பகுதி 'நடுநாடு’ எனப்பட்டது என அவர் கூறியுள்ளார்;
பாடல் வருமாறு:
"சொற்றதிரு முனைப்பாடித் துநாட்டை நடுநாடாச் சொல்வார் ஆன்ற கற்றஅறி வினரதற்குக் காரணநோக் கிடிற் சான்றோர் கனிந்துற் றோங்கித் துற்றதிரு நாட்டினுக்கும் சோறுகுறை வற்றவளம் சூழ்நாட்டிற்கும்
தெற்றநடு ஆர்ந்துஇரண்டு சீரும்மலிந்து ஓங்குகின்ற திறத்தாற் போலும்’
இப் பெயர்க் காரணம் மிகவும் பொருத்தமாகப் புலப்படுகிறது. இந்நாடு, வீரபாண்டியன் காலத்துக் கல்வெட்டில், “நடுவில் மண்டலத்துத் திருமாணிக் குழி" என 'நடுவில் மண்டலம்' என்பதாய்க் குறிப்பிடப்பட்டிருப்பது ஈண்டு ஒப்புநோக்கத் தக்கது. நடுவில் மண்டலம் என்பதற்கு, நடுவே உள்ள நடுநாடு என்பதாகத்தான் பொருள் இருக்க வேண்டும்.
சிவசிதம்பரப் புலவரும் தமது கரையேறவிட்ட நகர்ப் புராணம்’ என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். இவர். திருமுனைப்பாடி நாட்டிற்கு 'நடுநாடு’ என்னும் பெயர் உண்மையையும் குறிப்பிட்டுள்ளார். இந் நாடு சீராமன் வழிபட்ட நாடு’ எனவும் புகழ்ந்துள்ளார். பாடற் பகுதிகள் வருமாறு:
“ஓவு றாப்பெரு வளஞ்செய ஒளிர்நடு நாடாம் பாவு சீர்முனைப் பாடிநாட் டணிவளம் பகர்வாம்’
திருப்பாதிரிப் புலியூர்ப் புராணம் -
திருநாட்டுப் படலம் - 102, 103, 104.
t திருவதிகைப் புராணம் - திருநாட்டுப் படலம் - 3.
1. திருவதிகைப் புராணம் - திருநாட்டுப் படலம் - 7.
f கரையேறவிட்ட நகர்ப் புராணம் - திருநாட்டுப் படலம் - 1, 40
'தொண்டை நாடு சான்றோர் உடைத்து'; 'சோழ நாடு சோறுடைத்து'
என்பன முதுமொழிகள்; இவ்விரு நாடுகட்கும் நடுவில் இருத்தலாலும், இவ்விரு நாடுகளின் தனிச் சிறப்பான சான்றோரையும் சோற்று வளத்தையும் தான் ஒருசேரப் பெற்றிருத்தலாலும் இப் பகுதி 'நடுநாடு’ எனப்பட்டது என அவர் கூறியுள்ளார்;
பாடல் வருமாறு:
"சொற்றதிரு முனைப்பாடித் துநாட்டை நடுநாடாச் சொல்வார் ஆன்ற கற்றஅறி வினரதற்குக் காரணநோக் கிடிற் சான்றோர் கனிந்துற் றோங்கித் துற்றதிரு நாட்டினுக்கும் சோறுகுறை வற்றவளம் சூழ்நாட்டிற்கும்
தெற்றநடு ஆர்ந்துஇரண்டு சீரும்மலிந்து ஓங்குகின்ற திறத்தாற் போலும்’
இப் பெயர்க் காரணம் மிகவும் பொருத்தமாகப் புலப்படுகிறது. இந்நாடு, வீரபாண்டியன் காலத்துக் கல்வெட்டில், “நடுவில் மண்டலத்துத் திருமாணிக் குழி" என 'நடுவில் மண்டலம்' என்பதாய்க் குறிப்பிடப்பட்டிருப்பது ஈண்டு ஒப்புநோக்கத் தக்கது. நடுவில் மண்டலம் என்பதற்கு, நடுவே உள்ள நடுநாடு என்பதாகத்தான் பொருள் இருக்க வேண்டும்.
சிவசிதம்பரப் புலவரும் தமது கரையேறவிட்ட நகர்ப் புராணம்’ என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். இவர். திருமுனைப்பாடி நாட்டிற்கு 'நடுநாடு’ என்னும் பெயர் உண்மையையும் குறிப்பிட்டுள்ளார். இந் நாடு சீராமன் வழிபட்ட நாடு’ எனவும் புகழ்ந்துள்ளார். பாடற் பகுதிகள் வருமாறு:
“ஓவு றாப்பெரு வளஞ்செய ஒளிர்நடு நாடாம் பாவு சீர்முனைப் பாடிநாட் டணிவளம் பகர்வாம்’
திருப்பாதிரிப் புலியூர்ப் புராணம் -
திருநாட்டுப் படலம் - 102, 103, 104.
t திருவதிகைப் புராணம் - திருநாட்டுப் படலம் - 3.
1. திருவதிகைப் புராணம் - திருநாட்டுப் படலம் - 7.
f கரையேறவிட்ட நகர்ப் புராணம் - திருநாட்டுப் படலம் - 1, 40
No comments:
Post a Comment