மன்னை தேசிய மேநிலைப் பள்ளி பற்றிய ஆவண பட முயற்சி பாராட்டுக்குரியது.
அதற்காக மன்னையின் மைந்தர்கள் அமைப்புக்கு வாழ்த்துக்கள் . அன்றய காலகட்டத்தில் மேல தஞ்சை மாவட்டத்தின் மிக பெரிய செல்வந்தர் குடும்பம் என பெயர் பெற்ற தண்ணீர்குண்ணம் உடையார் குடும்பத்தை சேர்ந்த T .S .சிங்காரவேலு உடையார் இப்பள்ளியை தொடங்கியதில் முக்கிய பங்கு வகித்தவர்.மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி முதலில் கீழராஜ வீதியில் இருந்த பள்ளி நிறுவனர் சிங்காரவேலு உடையார் அவர்களின் இல்லத்தில் தான் முதலில் தொடங்கப்பட்டது. பின்னர் தற்போது உள்ள இடத்திற்கு மாறியது.
1952ஆம் ஆண்டு மறைந்த பள்ளி நிறுவனர் சிங்காரவேலு உடையார் மகனும் மன்னார்குடி நகருக்கு பல வழிகளில் பெருமை சேர்த்த ஐயா T .S .சுவாமிநாத உடையார் இப்பள்ளியின் செயலர் மற்றும் தாளாளராக பொறுப்பேற்றார் . அது முதல், இப்பள்ளி வளர்ச்சியின் உச்சத்தை எட்ட தொடங்கியது. 1957 ஆம் ஆண்டு V.சீனிவாசனை பள்ளியின் தலைமை ஆசிரியராக நியமித்தார். நல்ல திறமையான ஆசிரியர்களை கண்டறிந்து வேலை வாய்ப்பு அளித்து இப்பள்ளியில் நல்ல தரமான கல்வி கிடைக்க வழி வகை செய்தது சுவாமிநாத உடையார் ஐயா தான் என்றால் அது மிகையாகாது. ஐயா T.S.சுவாமிநாத உடையாரின் சகோதரர் கடுகு சார் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட T .B .சிவசாமி அவர்கள் உடற்கல்வி ஆசிரியராக இருந்த போதுதான் இப்பள்ளி விளையாட்டு துறையில் மாநில அளவில் பல சாதனைகளை படைத்தது.
42 ஆண்டுகள் தாளாளராக இருந்த சுவாமிநாத உடையார் ஐயா காலத்தில் பள்ளியின் உள்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து வளர்ச்சி திட்டங்களும் நடந்தது, அவர் காலத்தில் தான் 1978ல் உயர் நிலை பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்ந்தது. மன்னார்குடி மற்றும் சுற்று வட்டாரங்களை சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த பல மாணவர்களின் கல்விக்கு வித்திட்டவர் உடையார் ஐயா அவர்கள். தேசிய மேனிலைப் பள்ளியையும் . ஐயா சுவாமிநாத உடையாரையும் பிரித்து பார்க்க இயலாது, இப்பள்ளியை பற்றி பேசும் போதும், எழுதும் போதும் சுவாமிநாத உடையரும் சேர்ந்தே பேசப்படுவார் .
ஐயா T .S .சுவாமிநாத உடையார் அவர்கள் மன்னை நகரின் நகராட்சி தலைவராகவும் , சட்டமன்ற உறுப்பினராக 1957 முதல் 1971 வரை மூன்று முறை இருந்துள்ளார். அவரின் அரசியல் தொடர்பின் காரணமாக அப்போதைய தமிழக முதல்வர்கள் திரு.காமராஜ், திரு.பக்தவச்சலம் , திரு.அறிஞர் அண்ணா மற்றும் திரு.கலைஞர் உள்ளிட்டோர் இப்பள்ளிக்கு வருகை தந்து பெருமை சேர்த்தனர்.
No comments:
Post a Comment