Udayar, Moopanar, Nainar

Parkavakulam ( Udayar, Moopanar, Nainar)

Sunday, May 6, 2018

#வாணகோவரையர்

 வன்னஞ்சூர்:

பதிற்றுப்பத்து 49ம் பாடலின் அடிப்படையில் சேரன் செங்குட்டுவன் மோகூர் பழையனை வீழ்த்தி இவ்வூரைக் கைப்பற்றியதால், அவன் பெயர் தாங்கி (செங்)குட்டுவன்னஞ்சூர் என்ற பெயர் மறுவி வன்னஞ்சூர் ஆனதாக அறிஞர் கூறுகிறார்.
ஆனால், மோகூருக்கு அருகில் உள்ள சிறுவங்கூர் பெருமாள் கோவில் கல்வெட்டு, அக்கோவிலுக்கு அளித்த நில தானத்தை குறிப்பிடுகையில் மோகூர் குறித்து சில தகவல்களை தருகிறது. அதில் வன்னெஞ்ச நாயனார் கோவில் என்று ஒரு சிவன் கோவிலை மோகூரில் இருப்பதாக அடையாளம் காட்டுகிறது. ஆனால், தற்போது அக்கோவில் முற்றிலும் அழிந்து கல்வெட்டுகள் ஏதும் கிடைக்கவில்லை (ஒரு சண்டிகேஸ்வரர் சிலை மற்றும் சில கோவில் இடிபாடுகள் தவிர).

ஆவணம் இதழ் - 11, பக்கம் - 44
கூடுதலாக, கள்ளக்குறிச்சிக்கு தென்கிழக்கே மகளூர் கிராமத்தில் உள்ள மூன்றாம் இராஜேந்திரனின் 7ம் ஆட்சியாண்டு கல்வெட்டு வன்னெஞ்சப் பெருமாளான வாணகோவரையர் சிற்றரசர் ஒருவரை குறிப்பிடுகிறது.
ஆக, வன்னஞ்சூர் என்ற ஊர்ப்பெயர் வாணகோவரையரின் பெயர் அடிப்படையில் உருவானதேயன்றி சேரன் செங்குட்டுவனின் அடிப்படையில் அல்ல.

நத்தமேடு:

“இம் மோகூரிற் பெரிய அகன்ற பாழ்மேடு உள்ள நிலமே பழைய அரண்மனை இருந்த இடமாகும் என்பர்”- என்கிறார் அறிஞர். அவர் கள ஆய்வு செய்த காலத்தில் பாழ் மேடாக இருந்த இடம் தான் இன்றைய நத்தமேடு கிராமமா என்பது உறுதிப்படுத்த இயலவில்லை. ஆனால், இவ்வூரில் 13-14ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலைகள் சில குளம் வெட்டுகையில் கிடைத்தது கொண்டும், ஆங்காங்கே சிதறிக் கிடப்பது கொண்டும் இங்கு பெருமாள் கோவில், சிவன் கோவில் இருந்து அழிந்ததை உணர முடிகிறது.

No comments:

Post a Comment

முனைவர் மு.பொன்னவைகோ

முனைவர் மு. பொன்னவைக்கோ இவர் தென்னாற்காடு மாவட்டத்தில் செங்கமேடு என்னும் சிற்றூரில் பெருநிழக்கிழார் முருகேச உடையார் அவர்களுக்கும், அருள்நிற...