Udayar, Moopanar, Nainar

Parkavakulam ( Udayar, Moopanar, Nainar)

Sunday, May 6, 2018

அருள்தரும்  ஸ்ரீ அபயாம்பிகை உடனாய அருள்மிகு ஸ்ரீ மாயூரநாத  சுவாமி திருக்கோயில் திருவாவடுதுறை ஆதீனம் குருமஹாசன்னிதானம் அவர்களின் அருளானையின் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் துலாஉற்சவத்திருவிழா ஐப்பசி மாதம் 21ந்  தேதி தொடங்கி 10 நாட்கள் கீழ்கண்டபடி சீரும் சிறப்புமாக நடந்து வருகிறது.

முதல் நாள் - மஹாத்துவஜாரோகணம் ( திருக்கொடியேற்றம் ) , வெள்ளிபடிச்சட்டத்தில் பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா.

இரண்டாம் நாள் - நாற்காலி மஞ்சத்தில் பஞ்சமூர்த்திகள்  திருவீதியுலா .

மூன்றாம் நாள் - காமதேனு கற்பகவிருட்ச வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா.

நான்காம் நாள் - பூதம்,பூதகி வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா.

ஐந்தாம் நாள் - மயிலம்மன் பூஜை மற்றும் ஓலைச் சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா.

ஆறாம் நாள் - யானை,யாளி வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா.

ஏழாம் நாள் - அருள்தரு ஸ்ரீ அபயாம்பிகை உடனாய அருள்மிகு ஸ்ரீ மாயூரநாத  சுவாமி திருக்கல்யாணம்.
எட்டாம்
நாள் - நலுங்கு உற்சவம் மற்றும் துலக்கட்டத்திலிருந்து பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா.

ஒன்பதாம் நாள் - ரதாரோகணம் ( திருத்தேர் திருவிழா )

பத்தாம் நாள் - அருள்மிகு கௌரி மாயூரநாதசுவாமி இடபரூபராய் காவிரியில் தீர்த்தம் கொடுத்தருளல்.

அன்னை அருள்தரு ஸ்ரீ அபயாம்பிகை மலையமன்னர் உடையார் வம்சத்தில் உதித்த காரணத்தால் அவ்வம்சத்தினர் ஏழாம் நாள் திருவிழாவாகிய திருக்கல்யாணத்தை தங்கள் வீட்டுப் பெண்ணை
மணமுடித்துக் கொடுப்பது போன்ற சம்பிரதாயங்களுடன் இன்றளவும் மலையமார் உடையார் திருக்கல்யாண அறக்கட்டளை மூலம் மிகவும் சீரும் சிறப்புமாக நடத்தி வருகிறார்கள்.

திருமணத்தடைகள் நீங்கவும்,மனதிற்கு பிடித்தமான நல்ல வரன்கள் அமையவும்,நன்மக்கட்பேறு பெறவும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இத்திருக்கல்யாண வைபவத்தை ஒவ்வொரு ஆண்டும்
கண்டு தரிசித்து பலன் பெற்று வருவது இதன் சிறப்பம்சமாகும்.

No comments:

Post a Comment

முனைவர் மு.பொன்னவைகோ

முனைவர் மு. பொன்னவைக்கோ இவர் தென்னாற்காடு மாவட்டத்தில் செங்கமேடு என்னும் சிற்றூரில் பெருநிழக்கிழார் முருகேச உடையார் அவர்களுக்கும், அருள்நிற...