Udayar, Moopanar, Nainar

Parkavakulam ( Udayar, Moopanar, Nainar)

Sunday, May 6, 2018

மிக அருமையான தகவல் குறிப்பாய் வாணர்கள் பெருமை சொல்லும் கல்வெட்டு.

‪#தச்சூர்_நாசிக்கூடு‬: கிரந்தக் கல்வெட்டு
தச்சூர் சிற்பங்களுடன் காணப்படும் நாசிக்கூட்டில், யானையின் தலைமேல் காணப்படுகிறது ஒரு கிரந்தக் கல்வெட்டு (சமஸ்கிரத மொழியின் எழுத்து உருவங்களுக்கு கிரந்தம் என்று பெயர்). இன்றைய நிலையில், தச்சூர் சிவன் கோவிலின் பழங்கால கோவில் கட்டுமானம் இல்லாமையால், இக்கோவில் இறைவனின் பெயர், கட்டுவித்தவர் பெயர் மற்றும் அதன் காலத்தை தெளிவுப் பெறக் கூறும் ஒரே ஆவணம் இக்கல்வெட்டு மட்டும் தான். மேலும் இக்கல்வெட்டினை படிக்கக் கூடிய வகையில் சுத்தம் செய்து பொலிவுடன் விளங்கச் செய்த "பிரெஞ்ச்சு இன்ஸ்ட்டிட்யூட்டின் தொல்லியல் குழுவிற்கு மனமார்ந்த நன்றி.
இக்கல்வெட்டு மூலம் இக்கோவிலில் உள்ள இறைவனின் பெயர் "தயாவகேஸ்வரர்" என்றும் கோவிலின் பெயர் "தயாவகேஸ்வர கிருஹம்" என்பதும் இதனைக் கட்டுவித்தவர் விஷ்ணு எனும் வாணர் குல அரசனின் மகள் என்ற முக்கிய தகவல்களைத் தருகிறது.

தமிழ் விளக்கம்:
வரி-1: ஸ்ரீ விஷ்ணோர் பா3ணகுலாதி4 பஸ்ய தநயா ப4(ர்)த்து ரொத4ஹ்பதே(ர்)
வரி-2: பூ4நாத2ஸ்ய பதிவ்ரதா ஹிமவதஹ் கந்யெவ த4ந்யா ஸதீ
வரி-3: பூஜ்யா யா பு4வநெ க3ழாத4 கதயா தெ3வ்யா தயா நிர்ம்மிதெ
வரி-4: ஸாந்நித்4 யெந த3யாவகேஸ்2வர க்3ரஹே ஸ2ம்பு4ஸ்2 சிரந் திஸ்ரஷ்ட4து.
தமிழாக்கம்:
வாண குலத்தலைவன் விஷ்ணுவின் மகள், ஹிமவானின் மகளைப்போல சிறந்தவள், கணவன் ரொத4ய்பதிக்கு(?) ஏற்ற கற்புடை மனைவியால் தன் நற்குணங்கள் மேம்படவும் உலகத்தார் வழிபடவும் கட்டப்பட்ட இத் தயாவகேஸ்வர கோவிலில் ஸம்பு (சிவபெருமான்) நீண்டகாலம் வீற்றிருக்கட்டும்.

No comments:

Post a Comment

முனைவர் மு.பொன்னவைகோ

முனைவர் மு. பொன்னவைக்கோ இவர் தென்னாற்காடு மாவட்டத்தில் செங்கமேடு என்னும் சிற்றூரில் பெருநிழக்கிழார் முருகேச உடையார் அவர்களுக்கும், அருள்நிற...