#செம்பியன்
செம்பியன் கண்டியூர் குறுநில மன்னன்
செம்பியன் என்றால் மாசற்ற சொக்கத் தங்கம் போன்றவன் என்று பொருள். கண்டியர்கள் மன்னர்களாகவும் அமைச்சர்களாகவும், படைத்தளபதிகளாகவும், வேளீர் போன்று குறுநில மன்னர்களாகவும் இருந்தவர்கள்.என்வே கண்டியர் + ஊர் என்ற பொருளில் வழங்கிய பகுதி கண்டியூர் என்றாகி செம்பியன் பட்டமும் சேர்ந்து செம்பியன் கண்டியூர் என்று வழங்கப்பட்டு வருகிறது.
நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டத்தில் காவிரி ஆற்றின் வடகரையில் குத்தாலத்திலிருந்து இரண்டு கி.மி தொலைவில் திருமணஞ்சேரி செல்லும் வழியில் அமைந்துள்ளது செம்பியன் கண்டியூர் என்ற இன்றைய சிற்றுர், இவ்வூர் காவிரி ஆற்றின் கிளை நதியான விகிரமன் ஆற்றின் மேற்கரையில் அமைந்துள்ளது. இவ்வூரின் அரண்மனையும், சிவன் கோயிலும் அதன் கிழக்கில் அமைந்திருந்த தெருவும் தற்போது அழிந்து விட்டன. பிற்கால சோழர் ஆட்சியின் போது இவ்வூரில் செம்பியன் கண்டியூர் ஸ்ரீநக்கன் கண்டியர் என்கிற குறுநில மன்னன் ஆண்டுள்ளான். இவன் கண்டியூரைச் சுற்றியுள்ள 18 ஊர்களுக்கு தலைவனாக இருந்துள்ளான். செம்பியன் கண்டியூர் அருகில் உள்ள வில்லிய நல்லூர் என்ற இடம் விற்போர் பயிற்சித் தளமாகவும் இருந்துள்ளது. மேலும் செம்பியன் கண்டியூருக்கு மேற்கே உள்ள பெரிய திடலும், பெரிய குளமும் விற்போர் வீரர்கள் தங்கியிருந்த இடமாகவும் கருதப்படுகிறது. செம்பியன் கண்டியூருக்கு தெற்கே 12 கி.மீ. தொலைவில் செம்பியன் கண்டியூர் ஸ்ரீநக்கன் கண்டியன் பெயரால் ஸ்ரீகண்டர்புரம் மற்றும் நக்கம்பாடி போன்ற ஊர்களும் அமைந்துள்ளன என்ற விபரமும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன.
செம்பியன் கண்டியூருக்கு கிழக்கே இரண்டு கி.மீ தொலைவில் திருவேள்விக்குடியில் ஒரு சிவன் கோயில் கட்டியுள்ளார்.இக் கோயிலில் செம்பியன் மாதேவியாரும் அவர் கணவர் கண்டராதித்த சோழனும் சிவ பெருமானுக்கு வேள்வி செய்து வழிபாடுகள் நடத்தி உள்ளனர். அக்காட்சி கோயிலின் மகா மண்டபத்தில் புடைப்புச் சிற்பமாக காட்சி தருகிறது.
மேலும் இக் கோயிலில் 60க்கும் மேற்பட்ட சோழர்காலக் கல்வெட்டுகள் (கி.பி. 8 முதல் 12ஆம் நூற்றாண்டு வரை) இடம் பெற்றுள்ளன. இக் கோயில் கல் வெட்டில் தான் செம்பியன் கண்டியூர் என்ற பெயர் இடம்பெற்றுள்ளதை அறிய முடிகிறது. சோழர் காலத்திற்கு முன்புள்ள சான்றுகள் த்ற்போது அகழாய்வு மூலம் வெளிக் கொணரப்பட்டுள்ளன.
செம்பியன் கண்டியூர் குறுநில மன்னன்
செம்பியன் என்றால் மாசற்ற சொக்கத் தங்கம் போன்றவன் என்று பொருள். கண்டியர்கள் மன்னர்களாகவும் அமைச்சர்களாகவும், படைத்தளபதிகளாகவும், வேளீர் போன்று குறுநில மன்னர்களாகவும் இருந்தவர்கள்.என்வே கண்டியர் + ஊர் என்ற பொருளில் வழங்கிய பகுதி கண்டியூர் என்றாகி செம்பியன் பட்டமும் சேர்ந்து செம்பியன் கண்டியூர் என்று வழங்கப்பட்டு வருகிறது.
நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டத்தில் காவிரி ஆற்றின் வடகரையில் குத்தாலத்திலிருந்து இரண்டு கி.மி தொலைவில் திருமணஞ்சேரி செல்லும் வழியில் அமைந்துள்ளது செம்பியன் கண்டியூர் என்ற இன்றைய சிற்றுர், இவ்வூர் காவிரி ஆற்றின் கிளை நதியான விகிரமன் ஆற்றின் மேற்கரையில் அமைந்துள்ளது. இவ்வூரின் அரண்மனையும், சிவன் கோயிலும் அதன் கிழக்கில் அமைந்திருந்த தெருவும் தற்போது அழிந்து விட்டன. பிற்கால சோழர் ஆட்சியின் போது இவ்வூரில் செம்பியன் கண்டியூர் ஸ்ரீநக்கன் கண்டியர் என்கிற குறுநில மன்னன் ஆண்டுள்ளான். இவன் கண்டியூரைச் சுற்றியுள்ள 18 ஊர்களுக்கு தலைவனாக இருந்துள்ளான். செம்பியன் கண்டியூர் அருகில் உள்ள வில்லிய நல்லூர் என்ற இடம் விற்போர் பயிற்சித் தளமாகவும் இருந்துள்ளது. மேலும் செம்பியன் கண்டியூருக்கு மேற்கே உள்ள பெரிய திடலும், பெரிய குளமும் விற்போர் வீரர்கள் தங்கியிருந்த இடமாகவும் கருதப்படுகிறது. செம்பியன் கண்டியூருக்கு தெற்கே 12 கி.மீ. தொலைவில் செம்பியன் கண்டியூர் ஸ்ரீநக்கன் கண்டியன் பெயரால் ஸ்ரீகண்டர்புரம் மற்றும் நக்கம்பாடி போன்ற ஊர்களும் அமைந்துள்ளன என்ற விபரமும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன.
செம்பியன் கண்டியூருக்கு கிழக்கே இரண்டு கி.மீ தொலைவில் திருவேள்விக்குடியில் ஒரு சிவன் கோயில் கட்டியுள்ளார்.இக் கோயிலில் செம்பியன் மாதேவியாரும் அவர் கணவர் கண்டராதித்த சோழனும் சிவ பெருமானுக்கு வேள்வி செய்து வழிபாடுகள் நடத்தி உள்ளனர். அக்காட்சி கோயிலின் மகா மண்டபத்தில் புடைப்புச் சிற்பமாக காட்சி தருகிறது.
மேலும் இக் கோயிலில் 60க்கும் மேற்பட்ட சோழர்காலக் கல்வெட்டுகள் (கி.பி. 8 முதல் 12ஆம் நூற்றாண்டு வரை) இடம் பெற்றுள்ளன. இக் கோயில் கல் வெட்டில் தான் செம்பியன் கண்டியூர் என்ற பெயர் இடம்பெற்றுள்ளதை அறிய முடிகிறது. சோழர் காலத்திற்கு முன்புள்ள சான்றுகள் த்ற்போது அகழாய்வு மூலம் வெளிக் கொணரப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment