Udayar, Moopanar, Nainar

Parkavakulam ( Udayar, Moopanar, Nainar)

Sunday, May 6, 2018

மிலாடுடையார்.
விகிரம சோழ மிலாடுடையார் கி.பி.985 - 1014
முதலாம் இராசராச சோழன் காலத்திய குறு நில மன்னாவான். இராமன் சித்தவடவன், இராம தேவன் சித்தவடவன், மிலாடுடையார் இராமன் நாட்டடிகள் முதலான வேறு பெயர்களும் இவருக்குண்டு.புளிசையன்சாமி அப்பை என்பார் இவரின் மனைவியாவார். மலாடமா தேவியார் என்றும் இவள் அழைக்கப்பெற்றாள். இத்தேவியார் பாண்டிய மன்னரின் மகள் என்றும் கல்வெட்டு கூறுகிறது. இவ்வம்மையார் எந்த பாண்டிய மன்னரின் மகள் என்று அறிய முடியவில்லை. இம்மன்னன் முதலாம் இராசராச சோழனின்ன் அம்மானாக இருத்தல வேண்டும் என்றும் கருதப்படுகிறது.

இரண்டாம் பராந்தகனான சுந்தரசோழனின் மனைவியருள் ஒருவரான வானவன் மாதேவி விகிரம சோழ மிலாடுடையாரின் மகளாக இருத்தல்வேண்டும் என்றும் வரலாற்று ஆவணங்கள் செப்புகின்றன. இராசராச சோழ்னின் 5வது ஆண்டில்(கி.பி 990)புளிசையன்சாமி அப்பை, திருக்கோவலூர் வீரட்டான உடையார்க்கு நந்தா விளக்கு எரிக்க 96 ஆடுகளை முதற்பொருளாக வழங்கியுள்ளதாகவும் அறிய முடிகிறது.

விகிரம சோழ மிலாடுடையார் காலத்தில் வெண்மானுடைய நீலன் மாதேவனான மலையர் பீமமிலாடப் பேரைரயன் என்பான் அரசு அதிகாரியாகவும் படைத்தலைவனாகவும் இருந்துள்ளான். இவன் மனைவி ப்ரதானி என்பாள் வீரட்டானத்தார்க்கு வழங்கிய விளக்குத்தானம் பற்றி கல் வெட்டு ஒன்றும் உள்ளது.

உத்தமசோழ மிலாடுடையார் (மனைவி கணபதி மயிலாடி)
இராசேந்திரசோழ மிலாடுடையார்
முடிகொண்ட சோழ மிலாடுடையார்
செம்பியன் மிலாடுடையார்
கங்கைகொண்டசோழ மிலாடுடையார்

No comments:

Post a Comment

முனைவர் மு.பொன்னவைகோ

முனைவர் மு. பொன்னவைக்கோ இவர் தென்னாற்காடு மாவட்டத்தில் செங்கமேடு என்னும் சிற்றூரில் பெருநிழக்கிழார் முருகேச உடையார் அவர்களுக்கும், அருள்நிற...