Udayar, Moopanar, Nainar

Parkavakulam ( Udayar, Moopanar, Nainar)

Sunday, May 6, 2018

#பார்க்கவன்

நத்தமான் என்ற சொல் சமவெளியில் வாழ்பவன் எனப் பொருள்படும். மலையமான் மலைகளில் வாழ்பவன். சுதர்மான் அரும்பெரும் செயல்கள் புரியும் வீரனாவான். நத்தம்பதி என்பது நத்தமான் என்பதனுடைய மற்றொரு வடிவமாகும். இந்த மூன்று சாதியினரும் குல சேகரன்  என்ற சேரமன்னன் மரபில் வந்தவர்கள். அவனுக்கு மூன்று மனைவியர் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருத்தியும் பெற்றெடுத்த பிள்ளையே இந்த மூன்று சாதிக்கும் மூதாதையர் என ஒரு வழக்கு வரலாறு கூறுகின்றது. இது பற்றி வேறு வழக்கு வரலாறுகளும் உண்டெனினும் அனைத்தும் இச் சாதிகளின் மூதாதை ஒரு சேர வேந்தனே என்பவனாகும்.

 இவர்கள் முக்கியமான பொறுப்புக்களில் இருந்தவர்கள் என்பதனைப் பண்டரியார், பண்டாரத்தார் என்ற இவர்களுடைய பட்டப்பெயர்கள் உறுதி செய்கின்றன. இவற்றைச் சிலர் இன்றும் தரித்து வருகின்றனர். சிலர் பயிரிடுவோரால் பாளையக்காரர் என அழைக்கப்படுவதோடு காவல்காரர் என்ற பட்டத்தையும் புனைந்து கொள்கின்றனர்” என 1891 சென்னை மாநிலக் கணக்கெடுப்பு அறிக்கை தெரிவிக்கின்றது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த , மலையமான், நத்தமான், சுதர்மான் ஆகியோர் பற்றிய ஒரு குறிப்பில் திரு எப். ஆர். உற மிங்வே எழுதுவது வருமாறு: “1901 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பு அறிக்கையில் இவை தனித்தனிச் சாதிகளாகப் பதியப்பட்டிருப்பினும் இம் மாவட்டத்தில் இவை உடையார் என்ற சாதியின் அகமணக்கட்டுப்பாடு உட்பிரிவுகள் எனத் தெரிய வருகின்றன.
 அரசி கரை நத்தமான் என்பவர்கள் தீவிர வைண வழிப்பாட்டினர் என்பதால் இன்றளவும் திருமண உறவு முறையை தவிர்த்து வருகின்றனர் . மூன்று பிரிவினுள்ளம் காணிகள் என்ற தெளிவான புறமணக்கட்டுப்பாடு உடைய குலப்பிரிவுகள் உள்ளன. குளத்தூர், கண்ணனூர், அரியலூர் என்பது போன்ற இக்காணிப்பாளர்கள் இக்காணிகளின் குல முதல்வர்கள் வாழ்ந்த இடத்தில் அடிப்படையில் அமைந்தவை. உடையார் பிரிவினர் திருமணம், சாவு முதலானவற்றுக்கான சடங்குகளின் போது பூனூல் அணிந்து கொள்வர். சிலர் அண்மையில் பூனூல் அணியத் தொடங்கியுள்ளனர். சுதர் மான்கள் 16ம் நூற்றாண்டு வரை வாள் எடுத்து போர் புரிந்ததால் மூர்க்க தனமாக இருப்பார்கள்  சுதர்மான்களைத் தவிர மற்ற பிரிவினர் சட்டத்தை மதித்தவர்களாகப் பயிர்த்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். சுதர்மான்களின் ஒரு பிரிவினரான கபிஸ்தலம் மூப்பனார்கள் அரசியலிலும் , ஆன்மீகத்திலும் சிறந்தவராகவும் இருப்பர்.

திருமண உடன்பாடு செய்து கொள்வதன் முன் மணமகள் வீட்டார் மணமகன் இல்லம் சென்று அங்கு உணவு கொள்வர்.
 கணித்தறிவதே இந்த விருந்தின் நோக்கம் ஆகும். ஒருவன் மணம் செய்துகொள்ளும் உரிமையுடைய முறைப் பெண்ணை அவளுடைய பெற்றோர் அவனுக்கு மணம் செய்து தர மறுப்பார்களாயின் அவன் அந்தப் பெண்ணின் கழுத்தில்தாலி அணிவித்து அவளைத் தன்னுடைய மனைவியாக்கிக் கொள்வான். குழந்தைகள் மணத்தைப் பற்றிய உடன்பாட்டையும் இவர்கள் மேற்கொள்வதுண்டு. அப்பொழுது குழந்தைகளுக்குப் புத்தாடையும் புதுப்பாயும் வழங்கி அவர்களின் நெற்றியில் திருநீறு பூசுவர். graji சடங்கின்போது தீட்டுக்கு உள்ளான குடும்பத்தார் சுடுகாட்டிலிருந்து திரும்பும்போது கொஞ்சம் அரிசியினை மென்று துப்புவர். பதினாறாம் நாள் கணவனை இழந்த ஒருத்தி விளக்கை வழிபடுவதோடு உப்புச் சட்டியினையும் தொழுவாள்.

 நத்தமான் சாதிப் பெண்கள் மார்பை மறைத்து ரவிக்கை அணிவார்கள். தங்கள் காதுகளின் மடல் நீண்டு தொங்கும்படியாக வளர்த்துக் கொள்ளுவார்கள்.  மலையமான் சாதிப் பெண்கள் தங்கள் தாலியினை நூலுக்குப் பதிலாகத் தங்கச் சரட்டில்(காரை) கோத்து அணிவர்.

மூவறும் காரை அணியும் பழக்கம் உடையவர்கள் காலபோக்கில் மாற்றி கொண்டனர்

தென் ஆர்க்காடு மாவட்டக் கையேட்டில் உடையார்கள் பற்றித் திரு பிரான்சிஸ் கூறியுள்ளவை வருமாறு: "தென் ஆர்க்காடு மாவட்டததி எண்ணிக்கையில் மிகுதியாக இருக்கும் சாதியார் உடையார்களே. இவர்களுள் பெரும்பாலோர் பயிரிடுவோர்(15ம் நூற்றாண்டுக்கு அப்புறம்) கள்ளக்குறிச்சியில் இவர்களுள் பலர் வட்டிக்கை வைத்துள்ளனர்.
 உடையார்கள் சாதியிலிருந்ததே பிரிட்டிசாரின் ஆளுகையின் தொடக்க நாள்களில் காவல்காரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். காவல்துறையினராக அமர்த்தப்பட்ட இவர்கள் நாட்டில் திருடர் நடமாட்டம் இல்லாது கண்காணிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். இவ்வாறு காவல்காரர்களாக இருந்தவர்களின் சந்ததியினர் இன்று பாளையக்காரர் எனச் சமூகத்தவர்களால் போற்றப்படுவதோடு சமூகத்தில் செல்வாக்கும் பெற்றவர்களாக உள்ளனர்.


No comments:

Post a Comment

முனைவர் மு.பொன்னவைகோ

முனைவர் மு. பொன்னவைக்கோ இவர் தென்னாற்காடு மாவட்டத்தில் செங்கமேடு என்னும் சிற்றூரில் பெருநிழக்கிழார் முருகேச உடையார் அவர்களுக்கும், அருள்நிற...