Udayar, Moopanar, Nainar

Parkavakulam ( Udayar, Moopanar, Nainar)

Sunday, May 6, 2018

பார்க்கவ குலத்தோரை உரிமை கொள்ள பல சமுதாயங்கள் சில புல்லுருவி வேலைகளை செய்கின்றன.
14ம் நூற்றாண்டிற்கு பிறகு விவசாய தொழிலை மேற்கொண்டனர் ஆதலால் வேளீர் மரபில் உள்ள எங்களை வெள்ளாளர் பிரிவில் உள்ள அனைவரும் உரிமை கொள்ள முற்படுகின்றனர் உங்கள் கூற்று தவறானது .வரலாற்றை நன்கு படியுங்கள் என் நட்பு சாதிகளே.

 மலாடர்=மலையர்=சேதியர்=மழவர்.
பார்க்கவ குல மக்கள் வேளாண்மையிலும் ஈடுபடுவதால் வெள்ளாளர் போன்ற ஒரு ஜாதியாக அறியாதவர்களால் கருதப்படுகின்றனர்.ஆனாலும் உண்மையில் சத்திரிய சமூகமான இவர்கள் எவ்வாறு எப்போது நில உடைமையாளர்களாக ஆனார்கள் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கொடுத்த விளக்கம் இதோசேர்ந்த மக்களான இவர்கள்...

"

் அதாவது பனிரெண்டாம் நூற்றாண்டு காலத்தில் நில உடைமை சமூகமாகி உடையார்,நாட்டார்,நாடாள்வார்,கிழார்(மூப்பனார்),
என்ற அந்தஸ்துகளில் இருந்து கால மாற்றத்தின் போது உண்டாகும் பல்வேறு அரசியல் காரணங்களால் பதினெட்டாம் நூற்றாண்டு முதலாய் பார்க்கவ குலத்தாரில் பலரும் முழுமையான விவசாயிகளாக மாறினார்கள்.

ஆனாலும் என்றைக்கும் தம்மை வெள்ளாளர் என்று கூறிக் கொண்டதும் கிடையாது. வெள்ளாளர்களோடு மண உறவு கொண்டதும் கிடையாது.
சித்திர மேழி பெரியநாட்டார் என்ற அமைப்பில் நாட்டார் பதவியில் இருந்த இவர்கள் வெள்ளாளர்களில் இருந்து தம்மை வேறுபடுத்திக்காட்டவே பதினைந்தாம் நூற்றாண்டிலேயே தம்மை பார்க்கவ குல சத்திரியர் என்று அழைத்துக் கொண்டனர்.
ஏனெனில் மன்னராட்சிக் காலந்தொட்டே வெள்ளாளரிடம் வரிவசூல் செய்யும் கடமை கொண்ட பண்டாரத்தார், பண்டரையர் போன்ற பதவிகளைக் கொண்டவர்கள் பார்க்கவ குல சமூகத்தவர்.பார்க்கவ வம்சத்து மலையமான் மக்கள் அனைவரும் மலையர் மலாடர் என்று வழங்கப்படும் ஒரு மரபைச் சேர்ந்தவர்கள்.சேதியர் உடையார் மூப்பனார்  என்றும் பட்டப்  பெயரால் அழைக்கப்படுபவர்கள். மலையமான்கள் பார்க்கவ குலத்தார் எனக்கூறும் கல்வெட்டு ஆதாரம்.
மலையமான்கள் தங்கள் இனம் என்று பல்வேறு இனத்தினரும் உரிமை கோரும் போது மலையமான் மன்னர்களே தங்களை பார்க்கவ குலத்தவர் எனக்கூறும் ஆதாரங்களில் முதன்மையானது...........
திருக்கோவிலூர் திருமால் கோவிலில் உள்ள கல்வெட்டு செய்தி:

"'மிலாடான
ஜனநாத வள நாட்டுக் குறுக்கைக் கூற்றத்துப்
பிரமதேயம் திருக்கோவலூரான ஸ்ரீ மதுராந்தகச்
சதுர்வேதி மங்கலத்து திரு விடைக் கழி ஆழ்வார்
ஸ்ரீ விமானம் முன்பு இட்டிகை படையாய்ப்
பலகை பிளந்தமை கண்டு பார்க்கவ வம்சத்து
மிலாடுடையார் இரண கேசரி இராமரான நரசிங்கவர்மர் கோயிலை இழிச்சி கற்கொண்டு ஸ்ரீ
விமானமும் மண்டபமும் எடுப்பித்து முத்துப் பந்தலுங்
கொடுத்து முன்பு கல்வெட்டுப் படியுள்ள நிபந்தங்கள்
எல்லாம் ஸ்ரீ விமானத்தே கல்லுவெட்டு
வித்தார் நரசிங்க வர்ம ரென்று அபிஷேகம் பண்ணி
முடிகவித்து மிலாடு இரண்டாயிரம் பூமியும் ஆண்ட
மிலாடுடையார் நரசிங்க வர்மர்.
சந்திராதித்த வல் எரிக்க வைத்தா திரு நந்தா விளக்கு
இரண்டு இவைக்கு விளக்கெரிக்க கொடுத்த
சாவா மூவாயப் பெரும்பசு அறுபத்து நாலு."

திருக்கோவிலூரிலுள்ள திருமால் கோவிலில் திரு விடைக்கழி ஆழ்வார் சன்னதி ஸ்ரீ விமானம் பழுது பட்டதைக்கண்டு...
பார்க்கவ வம்சத்தைச் சேர்ந்த மிலாடுடையார் இரண கேசரி இராமரான நரசிங்க வர்மர் செங்கலால் கட்டப்பட்ட கோயிலை புதிப்பித்து கருங்கற்களால் ஸ்ரீ விமானமும் மண்டபமும் எடுப்பித்து,ஐந்து ஸ்தூபியும் எடுத்து,உட்பிரகாரத்தையும் ஒருமண்டபத்தையும் கட்டி,முத்துக்கள் பதித்த விதானத்தையும் கொடுத்து,சூரிய சந்திரர் உள்ளவரை விளக்கெரிக்க இரண்டு நந்தாவிளக்குகளும் கொடுத்து (விளக்கு நெய்க்காக)அறுபத்து நான்கு பெரிய பசுக்களும் கொடுத்து இத்தகவலை கல்வெட்டில் வெட்டுவிக்கவும் செய்துள்ளார்,
நரசிங்க வர்மர் என்ற பட்டாபிஷேக பெயர் கொண்ட மிலாடு இரண்டாயிரம் பூமியும் ஆண்டவரான பார்க்கவ வம்சத்தை சேர்ந்த மிலாடு உடையார் நரசிங்க வர்மர்.
கல்வெட்டு கூறும் உண்மைகள் என்ற நூலில் தி.வை.சதாசிவ பண்டாரத்தார் மேற்கண்ட கல்வெட்டைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இன்னொரு காலம் அறியப்படாத கல்வெட்டில் பார்க்கவ வம்சத்து மிலாடுடையார் நரசிங்க வர்மர் பொன்னாலான ஸ்தூபி ஒன்றைக் கொடுத்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது.
மலையமான் மன்னர்களில் ஒருவரான வாணகோவரையன்என்பவர் இந்த கோவிலில் நந்தா விளக்கெரிக்க வேண்டி நிலங்களை தானமளித்துள்ளார் என்று கோவில் வெளிச்சுற்று வடக்குபுறச் சுவரில் ராஜராஜ சோழன் கால கல்வெட்டு கூறுகிறது.
அதே பகுதியில் மலையமான் பெரிய உடையான் என்ற மன்னர் கிராம சபையிடமிருந்து வரி விலக்கு பெற்ற நிலத்தினை வாங்கி இறைவனுக்கு தினசரி பூஜை,நைவேத்தியம் செய்விக்க தேவதானமாக வழங்கியுள்ளார் என்றொரு செய்தியும் காணப்படுகிறது.
அதே கோவிலில் வேணு கோபாலசுவாமி சன்னதிக்கு செல்லும் படிக்கட்டுகளில் உடையார் பாளையத்தை ஆண்ட உடையார்கள் சில கட்டிடங்களை எழுப்பியதாக கல்வெட்டு செய்தி காணப்படுகிறது.
சேலம் கல்வெட்டு:
சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டம் பேளூர் தான் தோன்றியவார் கோயில் முன் புதைந்து கிடந்த தூண் கல்வெட்டு ஒன்று கல்வெட்டு ஆய்வாளர் புலவர் துரைசாமி அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது,அதில்
பார்க்கவ கோத்திரத்து மிலாடுடையார் செம்பியன் மிலாடுடையார் என்ற மன்னர் பற்றிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தென்னார்க்காடு மாவட்டம் எலவானச்சூர் சிவன் கோவில் கல்வெட்டு,மற்றும் திருக்கோவில் வீரட்டானேஸ்வரர் கோவில் கல்வெட்டு.
முதலாம் ராஜேந்திர சோழரது ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட மேற்கண்ட இடங்களில் உள்ள கல்வெட்டுகளில்
பார்க்கவ கோத்திரத்து யாதவ வீமனை உத்தம சோழ மிலாடுடையான்.
என்ற மன்னன் இருந்ததான குறிப்புகள் காணப்படுகிறது.புரியாதவர் புரிந்து கொள்ள வேண்டும்.
தெய்வீக நரசிங்க உடையான் வம்சத்தில் வந்த பார்கவ குல உடையார்கள் மட்டுமே                 மலையமான் நத்தமான்  சுருதிமான்  என்ற தனித்தனி    வம்ச பெயர்கள்   உடையவர்கள்.      சுருதிமான் என்ற  தனித்தனி  வம்சப்பெயர்  உடையவர்கள்.                                                      சுருதிமான் மூப்பனார்களும்  உடையார்  என்ற  பட்டம் கொண்டோராயிருந்திருப்பினும் பின்னாளில்  காணியாட்சி  முறையில் சிறந்து விளங்காமையாள் தஞ்சை  திருச்சி போன்ற பகுதிகளில் வழக்கில் உள்ள ஜமீன்தார் முறைப்படியும் குல முதல்வர் என்ற பொருளிலும் மூப்பனார் என்ற பொதுவான பட்டம் கொண்டு மட்டுமே  அழைக்கப்படுகின்றனர்.  அவர்கள் தம்மை பார்க்கவ குல மூப்பனார் என்றோ , சுருதிமான் மூப்பனார்  என்றோ சொல்ல வேண்டும். முக்கியமாக பார்கவர்களில் உடையார்கள்   மலையமான் உடையார் நத்தமான் உடையார்  என்று தெளிவாக கூற வேண்டும்.இதுவே நம் சந்ததியினர்க்கு  தெளிவாக குறிப்பிடுவதே நம் கடமையாகும்

No comments:

Post a Comment

முனைவர் மு.பொன்னவைகோ

முனைவர் மு. பொன்னவைக்கோ இவர் தென்னாற்காடு மாவட்டத்தில் செங்கமேடு என்னும் சிற்றூரில் பெருநிழக்கிழார் முருகேச உடையார் அவர்களுக்கும், அருள்நிற...