Udayar, Moopanar, Nainar

Parkavakulam ( Udayar, Moopanar, Nainar)

Sunday, May 6, 2018

#தாலி

 தஞ்சை பெரிய கோயிலில் இருக்கும் இந்த கல்வெட்டு மிகவும் முக்கியமானதாகும்
காரணம் மூன்று முக்கிய செய்திகளை உள்ளடக்கியுள்ளது.
ஒன்று இராசேந்திர சோழன் பெயர் வருகிறது
இரண்டு அருள்மொழிதேவன் என்ற பெயர் வருகிறது.
மூன்று "தாலி" என்ற வார்த்தை பதிவாயிருக்கிறது.
நம்முடைய தமிழ் சமூக அமைப்பில் எந்த நூற்றாண்டிலிருந்து பெண்கள் தாலி அணியும் பழக்கம்
தொடங்கியது என்பது பெரிய விவாத பொருளாகும்.
சங்க காலமான கி.மு.3 தொடங்கி கி.பி.3 வரையிலான
600 ஆண்டுகளைதான் சங்க காலமாக ஏற்கபட்டுள்ளது.
சங்க காலத்திற்கு முன்பு எழுதப்பெற்ற மகாபாரத இதிகாசத்திலும் தாலியை பயண்படுத்தியதற்கான கூறுகள் இல்லை.
அதே போல் மற்றோரு இதிகாசமான இராமாயனத்தில்
ராமன் சீதைக்கு திருமணம் நடைப்பெற்றதாக கம்பரும் எழுயுள்ளார்.ஆனால் எந்த இடத்திலும் தாலி என்ற வார்த்தையை பயண்படுத்தியாக தெரியவில்லை.
சிலப்பதிகாரம் எழுய இளங்கோ அடிகளும் கோவலன்
கண்ணகிக்கு திருமணம் நடப்பதை பதிவு செய்திருக்கிறார்.அவரும் கூட மங்கல அணி என்று வார்த்தையைதான் பயண்படுத்தியுள்ளார்.
ஆக சங்க காலம் வரை பெண்கள் தாலி அணியும் பழக்கம்
இருந்ததற்கான வரலாற்று சான்று இல்லை.
அதன் பிறகு சங்கம் மறுவிய காலமாக கருதப்படும்
கி.பி 6 ஆம் நூற்றாண்டிலிருந்தோ அல்லது அதற்கு
பின்வந்த காலத்திலிருந்தோதான் தாலி கட்டிக்கொள்ளும்
பழக்கம் நடைமுறையில் வந்திருக்க வாய்ப்பிருக்கிது.
தாலி என்ற சொல் தாலிகம் என்ற சொல்லின் அடியாக பிறந்தது
தாலிகம் என்றால் பனை மரம் என்று பொருள் படும் .
அதாவது பனை ஓலையில் இன்னாருக்கும் இன்னாருக்கும் இந்த நாளில் அல்லது இன்று அல்லது இந்த காலத்தில் திருமணம் என எழுதி அவர்களின் கழுத்தில் மக்கள் மத்தியில் காட்டுவார்கள் .
தாலி பொருளாகுபெயராகத்தான் இங்கே பயன்படுத்தப்படுகிறது .
பின்னைய காலங்களில் மனித சிந்தனை நாகரிகம் போன்றன வளர்ச்ச்சி அடைய பனையோலை இன்றைய பவுனாக அதாவது தங்கமாக மாறியுள்ளது.

இந்த செய்தியை கூட முழுமையாக ஏற்று கொள்ளமுடியாது.காரணம் எதற்கும் சரியான வரலாற்று சான்றுகளை யாரும் பதிவு செய்ய வில்லை.
சரி அதற்கும் இந்த கல்வெட்டுக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி வரும்.

"ஆலயத்தில் இருக்கும் உமா பரமேஸ்வரிக்கு சாத்தியருள
கொடுத்த தாலி ஒன்று "
என்று கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேறு எந்த கோயில் கல்வெட்டிலாவாது இப்படி தாலி கொடுக்கப்பட்டதற்கான செய்தி உள்ளதா
சரி அதற்கும் இந்த கல்வெட்டுக்கும் என்ன தொடர்பு
என்ற கேள்வி வரும்.
"ஆலயத்தில் இருக்கும் உமா பரமேஸ்வரிக்கு சாத்தியருள
கொடுத்த தாலி ஒன்று "
என்று கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேறு எந்த கோயில் கல்வெட்டிலாவாது இப்படி தாலி கொடுக்கப்பட்டதற்கான செய்தி உள்னவா என்று எனக்கு தெரியவில்லை.
மேலும் விரிவாக இந்த கல்வெட்டைப்பற்றி
கல்வெட்டு செய்தி
"ஸ்வஸ்தஸ்ரீ....
உடையார் ஸ்ரீ ராஜராஜஸ்வர உடையாருக்கு
சத்தானசம் செய்திட ஆர..வீ..லாலுடைய யான
..உடையார் கோயிலில் திருச்சுற்று மாளிடையில்
ஆலயத்து உமா பரமேஸ்வரியாருக்கு உடையார்..
ஸ்ரீ ராஜராஜ தேவர்க்கு யாண்டு ஒரு பத்தொன்பதாவது
வரை கொடுத்தன கல்லில் வெட்டியது ஆலயத்து
உமா பரமேஸ்வரியாருக்கு சாத்தியருள
கொடுத்த தாலி ஒன்று பொன் ஆடவல்லானால் ஒரு
கழஞ்சே இவர்க்கு ..பி..ராஜ ராஜ சோழ தேவர் சிவத்தலத்து.. இரட்டக்குளந்தாள் தெரிந்த......சிவத்தில்
உடையார் கோயிலில் கல்லில் எழுத்து வெட்டிவித்தன
அருள்மொழிதேவ..வளநாட்டு வண்டாளை,,இல்..
வில்ல கூற்றத்து சாத்தான்குடி வெள்ளாளன் இரவி
பாளுடையார்..ஸ்ரீராஜேந்திர சோழ தேவர்க்கு யாண்டு
மூன்றாவது வரை கொடுத்த பட்டத் தாரை ஒன்று
பொன் ஆடவல்லான் எழுத்து கல்லில் நிறை முக்காளே..
மூன்று மஞ்சானி.....

பேரி செட்டி கலியாணத்துக்கு பந்தலுக்கு வெள்ளை செவப்பு கலந்து கட்டிகொள்ளுகிறதும் அல்லாமல் வாழை கூந்தல் நெட்டிமாலை இதுகளும் கட்டி ஆனை அறசாணிவைத்து…கொம்பு..தப்பு மாப்பிள்ளைக்கும் பொண்ணுக்கும் அபேக்சிச்ச தூயது தரித்துக்கொண்டு கொம்புதப்பு சங்கீதமேளம் யிதுகளுடன் கல்யாணம் செயிது ஊர்கோலத்துக்கு செகப்பு துதி நா பல்லாக்கு கட்டிஇதுகளில் உள்கார்ந்து செகப்பு பாவாடை பிடிச்சு கொண்டு தீவட்டி மத்தாப்பு வாணவித்தையுடன்…”என்று சாதிவாரியாக திருமண விழாவில் வழங்கப்பட்டுள்ள உரிமைகள் குறித்துப் பேசப்படுகின்றன. ஆனால் தாலி பற்றி இந்தப் பஞ்சாயத்து ஏதும் பேசவில்லை. தாலிக்குப் பெரிதாக முக்கியத்துவம் ஏதும் இல்லை அப்போது.

எந்தெந்த சாதிகளுக்கெல்லாம் தாலி கட்டுதல் வழக்கத்தில் இருந்தன என்பதற்கு இப்போது நமக்குக் கிடைக்கும் ஆவணம், சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் எட்கர் தர்ஸ்டன் தொகுத்த ‘தென்னிந்திய குலங்களும் குடிகளும்’ – 7 தொகுதிகள் ஆகும். அத்தொகுப்பில் ஒவ்வொரு சாதியிலும் திருமண முறை எவ்வாறு இருந்தன என்பதை ஆவணப்படுத்தியுள்ளார், தர்ஸ்டன்.


No comments:

Post a Comment

முனைவர் மு.பொன்னவைகோ

முனைவர் மு. பொன்னவைக்கோ இவர் தென்னாற்காடு மாவட்டத்தில் செங்கமேடு என்னும் சிற்றூரில் பெருநிழக்கிழார் முருகேச உடையார் அவர்களுக்கும், அருள்நிற...